×

போக்குவரத்திற்கு இடையூறாக பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் வாகனங்கள் நிறுத்த தடை

நாகர்கோவில்: போக்குவரத்திற்கு இடையூறாக நாகர்கோவில், பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வாகனங்கள் நிறுத்த மாநகராட்சி தடை விதித்துள்ளது. நாகர்கோவில் பார்வதிபுரத்தில் மேம்பாலம் அமையப்பெற்றுள்ளது. இதன் கீழ் பகுதியில் உள்ள காலியிடங்களில் இரு சக்கர வாகனங்கள், கார்கள் போன்றவை நிறுத்திவிடப்படுகிறது. இதில் நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் இரு சக்கர வாகனம் நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில் வாகனங்கள் திரும்பும் இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி வைக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வக்கீல் மகேஷ் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தார். அப்போது அங்கு போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்திவிடப்படும் வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த வாகன ஓட்டிகளை கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக  அங்கு நிறுத்தப்பட்டிருந்த அனைத்து வாகனங்களும் அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் அப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று மேயர் மகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்….

The post போக்குவரத்திற்கு இடையூறாக பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் வாகனங்கள் நிறுத்த தடை appeared first on Dinakaran.

Tags : Parvathipuram flyover ,Nagercoil ,Parvathipuram ,Parvathipuram… ,Dinakaran ,
× RELATED கொளுத்தும் கோடை வெயில்; முக்கடல் அணை நீர்மட்டம் 0.9 அடியாக சரிந்தது